தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி.
தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் 1,596 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்றும் மட்டும் 27 பேர் வைரஸில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தம் 662 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 15 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 23,760 பேர் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 155 பேர் இருக்கின்றனர். 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 87,159 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டுமே 5,978 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 59,023 பேரின் மாதிரிகள் பரிசோதனை உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் 1,629 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது 946 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் ஐசோலேசன் வார்டியில் 1,878 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…