தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1, 885 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,885 ஆக அதிகரித்துள்ளது. அதிகப்படியாக சென்னையில் இன்று 28 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு 523 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனாவில் இருந்து இன்று மட்டும் 60 பேர் மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,885 பேரில் மொத்தம் 1020 பேர் வைரஸில் இருந்து பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 29,056 பேர் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 26 பேர் இருக்கின்றார்கள் என்று கூறியுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 7,495 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 87,605 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் 1,885 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா வார்டில் 838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…
காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…