தமிழகத்தில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 552 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் எண்ணிக்கை 7672 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து இன்று மட்டும் 489 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 4,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 688 பேரில் 87 வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்று வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று ஒரே நாளில் 10,333 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3,48,174 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 7,466 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025
“மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவது” – விஜய்க்கு பணக்கொழுப்பு என கூறிய சீமானுக்கு தவெக பதிலடி!
February 12, 2025
ஐபிஎலில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்? ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை.! வெளியான தகவல்..,
February 12, 2025
INDvENG : புரட்டி எடுத்த சுப்மன் கில்..இங்கிலாந்துக்கு இந்தியா வைத்த பெரிய இலக்கு!
February 12, 2025