தீவன தட்டுப்பாடு பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்-அச்சத்தில் விவசாயிகள் சங்கம்

Published by
kavitha

கால்நடை தீவன தட்டுப்பாட்டால் நகரங்களில் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் அச்சம் தெரிவித்துள்ளது.

கால்நடை தீவனங்கள் குறித்து அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கா தவறினால், தடையுத்தரவு காலத்தில் நகர பகுதிகளுக்கு பால் தட்டுப்பாடு அதிகரிக்கும் என தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர்  அச்சம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி கூறுகையில் தருமபுரி ஆவின் ஒன்றியத்தில் சராசரியாக  1.5 லட்சம் லிட்டர் பால் நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் கோடையில் தீவன பற்றாக்குறை ஏற்படும் அத்தகைய ஓரிரு மாதங்கள் இயல்பாகவே பால் வரத்து ஆனது பாதிக்கும். அத்தகைய காலங்களில் விவசாயிகள் தவிடு, புண்ணாக்கு, குச்சி தீவனம் ஆகியவற்றை கால்நடைகளுக்கு கூடுதல் ஊக்கமாக கொடுப்பர். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் அரசு பிறப்பித்துள்ள 144 தடையுத்தரவு அமலில் இருப்பதால் தவிடு உள்ளிட்ட கால்நடை தீவனங்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுவது மட்டுமன்றி போலீஸ் நெருக்கடியும்  ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை காலமாக இருக்கிறது. இந்த காலத்தில் இயல்பாகவே குறையும் பால் உற்பத்தி தற்போது ஏற்பட்டுள்ள தீவன தட்டுப்பாட்டால் இது மேலும் குறைந்து விடும். கடந்த சில நாட்களாக தருமபுரி ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் மட்டுமே  கொள்முதல் செய்யப்படுகீறது தடையுத்தரவால் வீடுகளிலேயே அனைவரும் இருந்து வரும் சூழ்நிலையில் நகரங்களில் பாலுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதேநேரம், பால் உற்பத்தியானது  படிப்படியாகக் குறைந்து வருகிறது.இவ்வாறு  இன்னும் 15 நாட்களுக்கும் மேலாக தடை அமலில் இருக்கும் என்று தெரிகிறது. எனவே, தவிடு, புண்ணாக்கு, குச்சி தீவனம் போன்ற கால்நடை தீவனங்களை, அவற்றின் உற்பத்தி பகுதிகளில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி எடுத்துச் செல்லவும், மேலும் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க  அரசு வழிவகைச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்ளூர்களிலும் விவசாயிகள் இவ்வகை தீவனங்களை வாங்கிச் செல்ல போலீஸார் அனுமதிக்க வேண்டும். உரிய நேரத்தில் அரசு போதிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மீதமுள்ள தடை காலத்தில் நகரங்களில் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று அச்சத்தோடு எச்சரிக்கை  தெரிவித்துள்ளார்.

Published by
kavitha

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

10 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

10 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

11 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

12 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

13 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

13 hours ago