சீனாவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் அங்கு பரவி வருகிறது. தற்போது அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களிலும் பரவியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் மற்ற நாடுகளில் பரவிவிடாமல் இருக்க அனைத்து நாடுகளிலும் உள்ள சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் சோதனை செய்த பின்னரே தங்கள் நாடுகளில் அனுமதிக்கின்றனர். இதன் விளைவாக இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பின்னர் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், இந்திய விமான நிலையங்களில் கடுமையான மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே அவர்களை அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், சீனாவிலிருந்து சென்னை சர்வேதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் 3 விதமாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதில் முன்னதாக கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட, சீனாவின் வுகான் நகரிலிருந்து வந்து சேருவோரிடம் உடனடியாக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள கிங்ஸ் பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்படும். அவர்கள் 28 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். நோய் பாதிப்பு அறிகுறிகள் தெரிந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இதுவரை ரத்த மாதிரிகள் சோதனைக்காக புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பரிசோதனை செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் நெருக்கத்தில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 242 பேர் சீனாவிலிருந்து தமிழகம் வந்துள்ளனர். அதில் அனைவரும் 28 நாட்கள் கண்காணிப்பில் இருக்கிறார்கள் என்றும், நோய் பாதிப்பு ஏற்பட்ட இடங்களிலிருந்து இனிமேல் வருபவர்களின் ரத்த பரிசோதனை கட்டாயமாக விமான நிலையங்களிலேயே எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பரவி வருவதால் பொதுமக்கள் தற்போது பீதியில் உள்ளனர்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…