சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விளைவின் காரணமாக சர்வதேச விமான நிலையத்தில் சீனாவிலிருந்து வந்து சேருவோரிடம் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே தங்களது நாடுகளில் அனுமதிக்கின்றனர். இந்த வைரஸ் பல நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் சீனாவில் தினமும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
சீனாவில் இதுவரை அங்கு உயிரிழப்பின் எண்ணிக்கை 304-ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரசால் 14,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே இந்த கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த கேரளா மாணவியிடம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சீனாவில் இருந்து கோலாலம்பூர் வழியாக சென்னை வந்த லியோ விஜினு என்பவருக்கு, விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…