சென்னையில் கொரோனா வைரஸ்.! பீதியில் பொதுமக்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • சீனாவில் தற்போது கொரோனா வைரசால் உயிரிழப்பின் எண்ணிக்கை 304-ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரசால் 14,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • இதனிடையே சீனாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு, விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விளைவின் காரணமாக சர்வதேச விமான நிலையத்தில் சீனாவிலிருந்து வந்து சேருவோரிடம் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே தங்களது நாடுகளில் அனுமதிக்கின்றனர். இந்த வைரஸ் பல நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் சீனாவில் தினமும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

சீனாவில் இதுவரை அங்கு உயிரிழப்பின் எண்ணிக்கை 304-ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரசால் 14,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே இந்த கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வந்த கேரளா மாணவியிடம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சீனாவில் இருந்து கோலாலம்பூர் வழியாக சென்னை வந்த லியோ விஜினு என்பவருக்கு, விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

8 minutes ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

12 minutes ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

1 hour ago

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

2 hours ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

3 hours ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

4 hours ago