தமிழகத்தில் மீண்டும் ஒருவர் பலி..மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதி – பீலா ராஜேஷ்

Published by
பாலா கலியமூர்த்தி

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.கொரோனாவால் 4,421 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து 326 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், 114 பேர்  உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 621 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 690 ஆக அதிகரித்துள்ளது.  இதில் பாதிக்கப்பட்ட 69 பேரில் 63 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள் என்றும் மீதமுள்ள நபர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், மற்ற மூவரின் தொற்றுக்கான வாய்ப்பை ஆய்வு செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 64 வயதுடைய பெண் உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,305 மாதிரிகள் பரிசோதனை செய்யப்டுள்ளது. வீட்டு கண்காணிப்பில் 66,431 பேர் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 233 பேர் இருக்கின்றார்கள் என்று கூறியுள்ளார். இதனிடையே 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 27,416 பேர் வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டதில் 19 பேர் குணமடைந்துள்ளார்கள் என்றும் இன்றும் மட்டும் 11 பேர் குணமடைந்துள்ளார்கள் என பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

3 minutes ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

41 minutes ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

1 hour ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

2 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

4 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago