உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.கொரோனாவால் 4,421 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து 326 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், 114 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 621 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 690 ஆக அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 69 பேரில் 63 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள் என்றும் மீதமுள்ள நபர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், மற்ற மூவரின் தொற்றுக்கான வாய்ப்பை ஆய்வு செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 64 வயதுடைய பெண் உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,305 மாதிரிகள் பரிசோதனை செய்யப்டுள்ளது. வீட்டு கண்காணிப்பில் 66,431 பேர் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 233 பேர் இருக்கின்றார்கள் என்று கூறியுள்ளார். இதனிடையே 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 27,416 பேர் வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டதில் 19 பேர் குணமடைந்துள்ளார்கள் என்றும் இன்றும் மட்டும் 11 பேர் குணமடைந்துள்ளார்கள் என பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…