இந்தியாவில் கொடிய கோரோனோவின் பிடியில் சிக்கி இதுவரை 15 பேர் பலியாகி உள்ளனர். 653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 42 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 26பேர். இந்நிலையில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள், தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியவசிய பொருள்களை மட்டும் மக்கள் பயன்படுத்தும் பொருட்டு ஒரு சில கடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதில், அத்தியவசிய பொருளான பாலும் ஒன்று, இந்நிலையில், இது தொடர்பாக பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கங்கள் வெளியிட்ட அறிக்கையில் : தமிழகத்தில் நாளை அதிகாலை 3.30மணிக்கு தொடங்கும் பால் விற்பனை காலை 9 மணிக்கு முடிவடையும் என தற்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பால் முகவர்கள் கடைகளில் பால் விற்பனை நேரம் குறைக்கப்படும் என்றும், சில்லரை விற்பனை கடைகளுக்கு பால் விநியோகம் செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…