கொரோனோ வைரஸ் தாக்குதல் எதிரொலியாக கோவை to கேரளா செல்லும் சாலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு விதமான கட்டுபாடுகளை விதித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகம், ஆந்திரா இடையிலான வாகன போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டு அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து உள்ளே விடப்பட்டு வந்த நிலையில் இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு வந்ததையடுத்து நள்ளிரவு முதல் கோவை மாவட்டத்திலிருந்து கேரளா செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்படி கோவை – கேரளா எல்லையில் உள்ள முள்ளி, ஆனைகட்டி, டிப்சிலிப் என 14 வழித்தடங்கள் மூடபட்டுள்ளன. மேலும் தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி வாளையாறு சோதனை சாவடியில் மட்டும் 100-க்கும் அதிகமான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.பால், காய்கறி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் மட்டுமே தற்போது அனுமதிக்கபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது மற்ற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ் திரையுலகில் மதயானைக் கூட்டம் மற்றும் ராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விக்ரம்…
அகமதாபாத் : 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பெங்களூர் அணிக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் விளையாடியபோது…
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…