இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது … – ஈபிஎஸ் அறிக்கை!

Published by
அகில் R

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் வரும் ஜூலை-10ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலை குறித்து அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.  ஏற்கனவே இந்த இடைத்தேர்தலுக்காக வேட்பாளர்களை திமுக, நதாக, பாமக கட்சிகள் அறிவித்திருந்த நிலையில் அதிமுகவின் வேட்பாளர் யார் என்று எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது.

தற்போது, விக்ரவாண்டியில் நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இருந்து யாரும் போட்டியிட போவதில்லை என்றும், அதிமுக இந்த தேர்தலை புறக்கணிக்கிறது என்றும் முடிவெடுத்து உள்ளனர். இது குறித்து 3 பக்க அறிக்கை ஒன்றை எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுக X தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், திமுகவை சாடியும், இந்த இடைத்தேர்தலை குறித்தும் பேசி இருந்தார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை குறித்து பேசியபோது, “விடியா அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதாலும், மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

3 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

3 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

4 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

6 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

6 hours ago