சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இருக்கும் அனைத்து திருமண மண்டபங்களையும் மாநகராட்சியிடம் ஒப்படைக்குமாறு மண்டப உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அங்கு கடந்த வாரத்தில் மட்டும் இரு மடங்கிற்கும் அதிகமாக கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனால் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் ஏற்கனவே கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைகளில் கொரோனா வார்டு நிரம்பியதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன. இதனை அடுத்து சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் கொரோனா வார்டுகளை அமைக்க பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, தற்போது சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இருக்கும் அனைத்து திருமண மண்டபங்களையும் மாநகராட்சியிடம் ஒப்படைக்குமாறு மண்டப உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது. அந்த மண்டபத்தில் கொரோனா பணிகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட உள்ளன.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…