பாஜக ஆதரவாளரர் உமா கார்க்கி மீது சைபர் கிரைம் காவல் விசாரணை.! கோவை நீதிமன்றம் அனுமதி.!

Published by
மணிகண்டன்

கோவை பாஜக ஆதரவாளர் உமா கார்க்கியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

கோவை சிங்காநல்லூரை சேர்ந்த உமா கார்த்திகேயன் உமா கார்க்கி என்ற பெயரில் சமூகவலைத்தளத்தில் செயல்பட்டு வருகிறார். இவர் தமிழக முதல்வர் பற்றியும் கருணாநிதி, பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பற்றியும்  தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவு தொடர்பாக திமுக ஐடி விங் பிரிவினர் கோவை சைபர் கிரைம் போலீசாரிடம், உமா கார்க்கி மீது தலைவர்கள் பற்றி அவதூறு விளைவிக்கும் விதமாக கருத்து பதிவிட்டதாக புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அவதூறு வழக்கில் உமா கார்க்கி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உமா கார்க்கியை 2 நாள் காவலில் எடுக்க சைபர் கிரைம் போலீசார் அனுமதி கேட்டனர். அதனை மறுத்து இன்று ஒருநாள் மட்டும் சைபர் கிரைம் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

45 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

1 hour ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago