தூத்துக்குடி பகுதியில் ஆடு மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால் விபத்து ஏற்படுகிறது, இதனால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகத்தினருக்கு வாகன ஓட்டிகள் நடவடிக்கை எடுக்க கோரி வற்புறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள காடு முத்தையாபுரம் முதல் வரையான சாலையோரம் உள்ள பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகள் மற்றும் மாடுகள் மல் உணவுக்காக சாலைகளில் உரிமையாளர்கள் திரிய விடுகின்றனர் , மேலும் முத்தையாபுரம் ஸ்பிக் நகர் தெர்மல் நகர் , முள்ளக்காடு என்ற அனைத்து இடங்களிலும் ஆடு மாடுகள்அதிகமாக காணப்படுகிறது .
மேலும் குறிப்பாக கடைகளில் அதிகம் இருக்கும் பகுதியில் இந்த மாடுகள் அதிக அளவு நிற்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது, கடந்த காலங்களில் மாநகராட்சி மூலம் கால்நடைகளை அவிழ்த்து விடக் கூடாது என வலியுறுத்தப்பட்டது .
இதனால் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு விபத்தும் குறைந்தது மேலும் தற்போது மீண்டும் அதிக அளவில் இந்த ஆடு மாடுகள் சுற்றி திரியும் நிலையில் சாலையின் நடுவில் இரவு நிலைதடுமாறி ஆடு, மாடுகள் மீது வாகனங்கள் மோதுகிறது, இதனால் மாடுகளுக்கும் வாகனங்களில் செல்பவர்களுக்கு காயமடைகின்றது.
மேலும் இது போல நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சாலையில் திரியும் கால்நடைகள் மீது மோதி விடக்கூடாது என்று வாகனங்களில் வளைத்து செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் மீது மோதும் சூழ்நிலை உருவாகிறது , இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தினர் இதற்காக உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு மாடுகளை பிடித்து காசோலையில் அடைப் பதுடன் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளார்கள்.
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…