#Breaking:”மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது” – டாஸ்மாக் மேலாண் இயக்குனர்

Published by
Edison
  • தமிழகத்தில் வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி காலை 6-00 மணி வரை ஊரடங்கை மேலும் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
  • இதனால்,அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த,கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கானது வரும் ஜூன் 7 ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில்,வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி,காய்கறி,மளிகைக்கடைகள் போன்ற சில கடைகள் மற்றும் நிறுவனங்கள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்,டாஸ்மாக் கடை இயங்க அனுமதி இல்லை.

இந்நிலையில்,ஊரடங்கு நீட்டிக்கபட்டதன் காரணமாக,தமிழக அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த அறிக்கையில்,கூறப்பட்டிருப்பதாவது:

  • அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை தமிழக அரசின் மறுஉத்தரவு வரும் வரை,மூடுமாறு அனைத்து மூத்த பிராந்திய மேலாளர்களுக்கும், மாவட்ட மேலாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
  • மேலும்,டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு அடிக்கடி சென்று கடைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அனைத்து மூத்த பிராந்திய மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
  • அனைத்து மாவட்ட மேலாளர்களும் விழிப்புடன் இருக்கவும், சட்டவிரோதமாக மதுபான விற்பனை இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்,இந்த ஊரடங்கு காலகட்டத்தில் எந்தவொரு கடைகளிலும் திருட்டுக்கு எந்த முயற்சியும் ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் காவல் துறையுடன் ஒருங்கிணைந்து எடுக்கப்பட வேண்டும்.
  • உங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட எந்தவொரு கடைகளிலும் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்த மாவட்டத்தில் உள்ள தடை அமலாக்க பிரிவு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
  • உங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகளிலும் நிறுவப்பட்டுள்ள அனைத்து சி.சி.டி.வி கேமராக்களும் சரியாக செயல்படுவதையும்,அந்த காட்சிகள் பதிவு செய்யப்படுவதையும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் உறுதி செய்வார்கள்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Edison

Recent Posts

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

26 minutes ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

38 minutes ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

1 hour ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

2 hours ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

2 hours ago

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

3 hours ago