PM Modi [File Image]
CV Shanmugam : திருக்குறளை ஏன் தேசிய நூலாக பிரதமர் அறிவிக்கவில்லை என சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார் .
திண்டிவனத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் அதிமுக பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உரையாற்றினார். அவர் பேசுகையில் பிரதமர் மோடி பற்றியும், திருக்குறள் பற்றியும் பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தார்.
அவர் பேசுகையில், 10 வருடமாக மத்தியில் பாஜக ஆட்சி இருக்கிறது. நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார். இதனால் அவர்தான் மகிழ்ச்சியாக இருக்கிறார். மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. மேலும், அதானி, அம்பானி தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மூன்று வேளையில் ஆறு முறை துணி மாற்றுகிறார் பிரதமர்.
400 ரூபாய் இருந்த சிலிண்டர் விலை தற்போது 1,200 ரூபாயாக உயர்த்தப்பட்டு, தற்போது 100 ரூபாய் குறைக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைக்கிறார்கள். 13 லட்சம் அரசு வேலை தற்போது வரை காலியாக உள்ளது. அதனை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பாஜகவை கடுமையாக விமர்சித்த கட்சிகள் தற்போது அவர்களுடன் கூட்டணி வைத்து ள்ளனர். மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கடந்த ஆண்டு ஆயிரம் பேர் புதிதாக வேலைக்கு எடுத்தார்கள். அதில் ஒருவர் கூட தமிழர் கிடையாது. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை பாதிக்கப்பட்ட நகராக அறிவித்தது அதிமுக ஆட்சிக்காலத்தில் தான். மேலும் இதனால் 5 கோடி ரூபாய் வளர்ச்சி நிதியாக சுற்றுசூழலை பாதுகாக்க ஒதுக்கியது அதிமுக ஆட்சியில் தான்.
பிரதமர் மோடி தமிழக வரும்போதெல்லாம் திருக்குறள் பேசுகிறார். வெளியூர் சென்றும் பல இடங்களில் திருக்குறளை குறிப்பிடுகிறார். குஜராத் சென்றால் அங்கு வேறு விதமாக பேசுகிறார். அதே போல மற்ற மாநிலங்களுக்கு சென்றால் அந்த மாநிலங்களில் வேறு விதமாக பேசுகிறார். திருக்குறள் பற்றி பல இடங்களில் குறிப்பிடும் பிரதமர் மோடி திருக்குறளை ஏன் தேசிய நூலாக அறிவிக்கவில்லை.? எல்லாம் அந்தந்த இடத்திற்கு தகுந்தார் போல் நடிப்பு, நாடகம் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்தார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…