முதலில் இவங்களுக்கு… அப்புறம் அவங்களுக்கு… ரூ.6000 நிவாரணத்தொகை.! அமைச்சர் உதயநிதி விளக்கம்.!

Published by
மணிகண்டன்

மிக்ஜாம் புயல் – கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு , திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வெள்ள நீர் குடியிருப்புகளில் புகுந்ததால் பெரும்பாலான மக்கள் இன்னும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை அறிவித்து அளித்து வருகிறது.

எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயல் – அமைச்சர் உதயநிதி

ஏற்கனவே தமிழக அரசு சென்னை முழுவதும் உள்ள மக்களுக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் ஒரு குடும்ப ரேஷன் கார்டுக்கு தலா 6000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் நிவாரண உதவி வழங்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் , 6000 ரூபாய் நிவாரண உதவி தொகையானது சென்னையில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் வழங்கப்படும். மற்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்டும். டோக்கன் கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன என கூறினார்.

அடுத்து, வெளியூரில் இந்து வந்து சென்னையில் தங்கி வேலை பார்க்கும் மக்களுக்கான நிவாரண தொகை பற்றிய கேள்விக்கு, முதலில் உள்ளூர் மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் அடுத்து, வெளியூர் மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து தங்கி வேலை பார்க்கும் வெளியூர்வாசிகள் அந்தந்த பகுதி ரேஷன் கடைக்கு வந்து விண்ணப்பம் பெற்று நிரப்பி தர வேண்டும். அதன் பிறகு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த பின்னர் நிவாரண தொகை வழங்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்து இருந்தது.

Recent Posts

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

4 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

5 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

6 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

7 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

7 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

10 hours ago