முதலில் இவங்களுக்கு… அப்புறம் அவங்களுக்கு… ரூ.6000 நிவாரணத்தொகை.! அமைச்சர் உதயநிதி விளக்கம்.!

Published by
மணிகண்டன்

மிக்ஜாம் புயல் – கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு , திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வெள்ள நீர் குடியிருப்புகளில் புகுந்ததால் பெரும்பாலான மக்கள் இன்னும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை அறிவித்து அளித்து வருகிறது.

எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயல் – அமைச்சர் உதயநிதி

ஏற்கனவே தமிழக அரசு சென்னை முழுவதும் உள்ள மக்களுக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் ஒரு குடும்ப ரேஷன் கார்டுக்கு தலா 6000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் நிவாரண உதவி வழங்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் , 6000 ரூபாய் நிவாரண உதவி தொகையானது சென்னையில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் வழங்கப்படும். மற்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்டும். டோக்கன் கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன என கூறினார்.

அடுத்து, வெளியூரில் இந்து வந்து சென்னையில் தங்கி வேலை பார்க்கும் மக்களுக்கான நிவாரண தொகை பற்றிய கேள்விக்கு, முதலில் உள்ளூர் மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் அடுத்து, வெளியூர் மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து தங்கி வேலை பார்க்கும் வெளியூர்வாசிகள் அந்தந்த பகுதி ரேஷன் கடைக்கு வந்து விண்ணப்பம் பெற்று நிரப்பி தர வேண்டும். அதன் பிறகு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த பின்னர் நிவாரண தொகை வழங்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்து இருந்தது.

Recent Posts

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

26 minutes ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

45 minutes ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

1 hour ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

2 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

2 hours ago

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!

வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…

3 hours ago