“2004 டிசம்பர் 26” உயிரிழந்தோரை நினைவில் ஏந்துவோம் – முக ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

இயற்கையின் சீற்றத்தால் ஆறாத வடுவாகிவிட்ட ஆழிப் பேரலைப் பேரழிவின் 16-ஆம் ஆண்டு இன்று என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுனாமி தாக்கியதின் 16- வது நினைவு தினத்தையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்தூவியும், கடலில் பாலை ஊற்றியும் பொதுமக்கள், மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்தோனேஷியா அருகே பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி உருவெடுத்தது. கரையை நோக்கி நகர்ந்த சுனாமி பேரலை கடற்கரையோரத்தில் இருந்த அப்பாவி மக்களை இரக்கமின்றி விழுங்கியது.

சுனாமி பேரலை இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை அகோரமாக தாக்கியது. தமிழ்நாட்டில் கடலூர், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்ட கடற்கரைகளை வாரி சுருட்டி சென்றது. இந்த சுனாமி பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை பறித்து கொண்டு உடைமைகளையும் தூக்கி சென்றது. இதனால் பலரும் வீடுகளை இழந்து தவித்தனர்.

இந்நிலையில், சுனாமி தினத்தையொட்டி திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இயற்கையின் சீற்றத்தால் ஆறாத வடுவாகிவிட்ட ஆழிப் பேரலைப் பேரழிவின் 16 -ஆம் ஆண்டு. 2004 டிசம்பர் 26 சுனாமியில் உயிரிழந்தோரை நினைவில் ஏந்துவோம். உடைமை இழந்தோரின் உரிமை காப்போம். சீற்றங்கள் குறைந்திடும் வகையில் இயற்கை வளங்களைப் பாதுகாப்போம் என்று பகிர்ந்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

8 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

10 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

14 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

15 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

17 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

17 hours ago