மன்னார் வளைகுடா பகுதியில் ரூ.5 கோடியில் “கடற்பசு பாதுகாப்பகம்” – தமிழக அரசு அரசாணை!

Published by
Edison

அழிவு நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு பால்க் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் ரூ.5 கோடியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க தமிழக அரசு அனுமதி.

பால்க் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடாவில் ரூ.5 கோடியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க அனுமதி வழங்கி  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மாநிலத்தில் அழிவு நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு பால்க் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக,தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

பால்க் விரிகுடா இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு ஆழமற்ற கடல் ஆகும்.பால்க் விரிகுடா அதன் சுற்றுச்சூழலில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் அனைத்து முக்கிய குழுக்களையும் கொண்ட பல்லுயிர் வளமாக உள்ளது.

அதில்,முதன்மை இனமாக டுகோங்(கடற்பசு) உள்ளது.ஆனால்,கட்டுப்பாடற்ற மீன்பிடித்தல் போன்ற காரணத்தால் தற்போது அவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

இதனால்,தமிழகத்தில் அழிந்து வரும் கடல் பசு இனங்கள் மற்றும் அதன் கடல் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் வகையில், மன்னார் வளைகுடா, பால்க் விரிகுடா “டுகோங் (கடல் பசு) பாதுகாப்புக் காப்பகம்” நிறுவப்படும் என்று கடந்த 03.09.2021 அன்று வனத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,பால்க் விரிகுடா மற்றும் மன்னார் வளைகுடாவில் ரூ.5 கோடியில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

“நான் சம்பாதித்து சொந்த காசுல எடுத்த படம்”…ஹீரோயினாக களமிறங்கும் ஜோவிகா!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார்.…

5 hours ago

அதிக தொகைக்கு எடுக்கப்பட்டு மோசமாக விளையாடிய 7 வீரர்கள்…கழட்டிவிட திட்டம் போட்ட அணி நிர்வாகங்கள்?

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம்.…

6 hours ago

இன்று இந்த 2 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்…எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : இன்று (27-05-2025) ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக…

7 hours ago

மாநிலங்களவை சீட்? அதிமுகவின் முடிவிற்காக காத்திருக்கும் தேமுதிக..!

சென்னை : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…

7 hours ago

நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவுவது குற்றமா? த.வெ.க தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து…

7 hours ago

எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கூறி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை – முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு…

9 hours ago