திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மார்பாளையத்தைச் சேர்ந்தவர் சவுந்தர் (27). சவுந்தரும், கம்மார்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவரும் உறவினர்கள் ஆவர். இந்நிலையில் சவுந்தரும் கல்லூரி மாணவியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் திருமணத்துக்கு, சவுந்தரின் பெற்றோர் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் காரணமாக திருமணத்திற்க்கு முன்பாகவே மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதை மாணவி தன் வீட்டில் மறைத்து வந்துள்ளார். மருத்துவமனைக்குச் சென்று கருவை கலைத்தால், வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தால் , காதலிக்கு தானே பிரசவம் பார்த்து, குழந்தையை வெளியே எடுத்து வீசி விடலாம் என சவுந்தர் முடிவெடுத்துள்ளார். இதற்காக கடந்தசில நாட்களாக பிரசவம் தொடர்பான வீடியோக்களை யூடியூப்-ல் பார்த்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் காலை கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஈகுவார்பாளையம் காப்புக் காட்டுக்கு மாணவியை சவுந்தர் அழைத்துச் சென்றார். அங்கு, கல்லூரி மாணவிக்கு சவுந்தர் பிரசவம் பார்த்துள்ளார். அப்போது கையால் குழந்தையை பிடித்து இழுத்தபோது, குழந்தையின் ஒரு கை துண்டானது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், குழந்தையின் கையை காட்டிலேயே வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி ஆபத்தான கட்டத்தை நெருங்கவே, அச்சமடைந்த சவுந்தர், அவரை மோட்டார் சைக்கிளில் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்த மாணவி சென்னை, ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, மாணவிக்கு அறுவை சிகிச்சை மூலம் இறந்த நிலையில் இருந்த ஆண் குழந்தையை மருத்துவர்கள் எடுத்தனர். தொடர்ந்து, மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் பாதிரிவேடு சீர்மிகு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சவுந்தரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…