திருப்பூரில் 2 நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில்களை இடிக்க தடை – உயர்நீதிமன்றம்

Published by
லீனா

திருப்பூர் மாவட்டம் பள்ள பாளையத்தில் உள்ள கருப்பராயசுவாமி கோயில் மற்றும் வடுக பாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்களையும் இடிக்க உயர்நீதிமன்றம் இடைக்கால தடை. 

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பள்ள பாளையத்தில் உள்ள கருப்பராயசுவாமி கோயில் மற்றும் வடுக பாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்களும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி, இரண்டு கோயில்களையும் இடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாளையத்தை சேர்ந்த கோபிநாதன் என்பவரும், வடுக பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ராஜா மற்றும் சவுந்தர் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் நூற்றாண்டு பழமையான கோயில்கள் வருவாய் துறை ஆவணங்களில் இடம்பெறுவதில்லை. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே இந்த கோவில்களை இடிக்க கூடாது என வாதிட்டனர்.

மனுதாரரின் கருத்தை ஏற்று கொண்ட நீதிபதிகள் நூற்றாண்டு பழமையான 2 கோவில்களையும் இடிப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த மனுவுக்கு அரசு தரப்பு பதில் அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

49 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

1 hour ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago