இன்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சந்தித்துள்ளார்.
நேற்று முன்தினம் அதிமுக செயற்குழுக்கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என நீண்ட நாட்களாக கேள்வி வந்த நிலையில் ,அக்டோபர் 7-ஆம் தேதி அதிமுகவின் முதமைச்சர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் இந்த செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடையே முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக முரண்பாடு எழுந்ததாக தகவல் வெளியானது.
இதனையடுத்து நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.இதனால் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தற்போது நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.மேலும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.
மேலும் நேற்று முதலமைச்சர் பழனிசாமியை அமைச்சர்கள் வேலுமணி,தங்கமணி,உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.இந்நிலையில் நேற்று முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த நிலையில் இன்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சந்தித்துள்ளார்.துணை முதல்வர் பன்னீர் செல்வம் 2ம் நாளாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…