தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் எனும் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர்களாக லட்சுமணன் மற்றும் சின்னமுத்து ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு இந்த இரண்டு ஆசிரியர்களும் தொடர்ந்து செல்போன் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை வீட்டில் சொன்னால் மதிப்பெண் குறைந்து விடுவதாக கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஒருநாள் அந்த ஆசிரியர்கள், மாணவியிடம் எல்லை மீற முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ந்து போன அந்த மாணவி நடந்ததை தனது பெற்றோரிடம் கூறியுள்ளர்.
தகவல் அறிந்து ஊர் மக்களுடன் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியருடன் பெற்றோர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்த ஆசிரியர்கள் மது போதையில் இருந்துள்ளனர். பின்னர் தலைமை ஆசிரியரிடம் இச்சம்பவம் குறித்தும் பலனளிக்காத காரணத்தால், இரண்டு ஆசிரியர்களையும் ஊர் மக்கள் தாக்கியுள்ளனர். தகவலறிந்து மகேந்திரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்பு இரண்டு ஆசிரியர்களையும் கைது செய்து அவர்களிடம் உள்ள செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மாணவி பென்னகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், விசாரணைக்காக மாணவி அழைத்துச் செல்லப்பட்டார். இரண்டு ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்து கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…