தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரி தொப்பூர் கணவாய் பகுதியில் ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன் பக்கம் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி மற்றும் மூன்று கார்கள் மோது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் சிக்கிய ஒரு லாரி பாலத்திற்கு கீழே விழுந்து நொறுக்கியது. இச்சம்பவத்தில் மூன்று பேர் உடல் கருகி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்கள் அனைத்தும் தீயில் கருகிய நிலையில் இதன் காரணமாக சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தர்மபுரி மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில் விபத்து தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…