மார்ச் 2020 முதல் இதுவரை 20,556 பேருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,077 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
கொரோனா வைரஸ் காலத்திலும் தமிழக அரசு கொரோனா அல்லாத பிற நோயாளிகளுக்கும் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் சிகிச்சைகளை அளித்து வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மார்ச் 2020 முதல் இதுவரை 20,556 பேருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,077 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 1,347 நபர்களுக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் 439 நபர்களுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சவாலான சூழ்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,154 கர்ப்பிணி பெண்களும், 37,436 குழந்தைகளும் உரிய சிகிச்சை பெற்று பயனைத்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார். 805 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு 88,280 அலகு ரத்தம் பெறப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சேவைகள் தொய்வுபெறமால் நடைபெற்றதன் காரணத்தால், கொரோனா தொற்று காலத்தில் விலைமதிப்பில்லாத உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திருவாரூர் : திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.முன்னதாக, திருவாரூர்…
மதுரை : மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் பூபாலன், தனது மனைவிக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும்,…
லண்டன் : நாட்டின் ஜனநாயக அமைப்பை பெரிய அளவில் மாற்றியமைக்கும் வகையில், அனைத்து இங்கிலாந்து தேர்தல்களிலும் 16 மற்றும் 17…
மயிலாடுதுறை : அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன்படி,…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…
சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…