ஜன.20ஆம் தேதிக்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் அமைச்சர் பொன்முடி
கொரோனா கால கட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு, ஆன்லைனில் தேர்வுகளும் நடைபெற்றது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் கல்லூரிகளில் வகுப்புகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகிறது. சமீபத்தில் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்தது.
இந்த அறிவிப்பிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆன்லைனில் பாடம் நடத்தினால், ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஜனவரி 20-ஆம் தேதிக்கு பிறகு நேரடியாக செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தரப்போடு நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களின் மீதான வழக்கும் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் தேர்வுக்கு ஒரு மாதம் அவகாசம் கேட்டு நிலைக்கு அரசு இரண்டு மாதம் அவகாசம் அளித்து ஜனவரி 20 க்கு பின் தேர்வு நடைபெற உள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…