தேசிய குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி, ஜே.என்.யு மாணவர்கள் மீது தாக்குதல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். இதில் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் ஆகிய முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் அனைத்து எதிர்கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா, பகுஜன் சமாஜ் ஆகிய காட்சிகள் கலந்துகொள்வதில்லை என ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதில், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக சரத்பவார் கலந்துகொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய கூட்டணி கட்சியான திமுக இதில் கலந்துகொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. இதுவரை காங்கிரஸ் கட்சி சார்பாக நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் பெரும்பாலும் திமுக கலந்துகொண்டது. அப்படி இருக்க இந்த கூட்டத்தை புறக்கணித்தது ஏன் என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஏமாற்றம் அளித்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது குறித்து திமுகவின் டி.ஆர்.பாலு கூறுகையில், கூட்டணி தர்மத்திற்கு தி.மு.க கட்டுப்படவில்லை என்று கே.எஸ். அழகிரி எங்கள் ஸ்டாலினைக் குற்றம்சாட்டிய பிறகு காங்கிரஸ் கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும். கூட்டணியில் பிரச்னை இருந்தால் ஸ்டாலினிடம் கே.எஸ்.அழகிரி நேரில் தெரிவித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி திடீர் அழைப்பு விடுத்துள்ளார்.இதனால் டெல்லி சென்று சோனியா காந்தியை சந்தித்தார் அழகிரி. தி.மு.க. உடனான கருத்து மோதல் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…