பேரிடர் நிதி ரூ.900 கோடி வழங்கப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்..!

Published by
murugan

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பாக நிதியமைச்சர் விளக்கம் அளித்தார்.  அதில் தென்மாவட்டங்களில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது. நான்கு மாவட்டங்களுக்கு உதவ நான் வைத்த கோரிக்கை ஏற்று உடனே அமித்ஷா உதவிகளை செய்தார். தென் மாவட்ட மழை, வெள்ள பாதிப்பால் நேற்று மாலை வரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் சிக்கிய 42,290 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்திய ராணுவத்தின் ஒன்பது ஹெலிகாப்டர் மூலம் மீட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன. மீட்பு பணியில் விமானப்படை, கடற்படை மூலம் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்றன. உள்துறை அமைச்சகத்தில் இருந்த இரண்டு கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து அங்குள்ள நிலைமைகளை 24 மணி நேரம் கவனித்து வந்தனர். ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய 800-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர். வெள்ளம் வடிவதற்கு முன்பே மீட்பு பணியில் மத்திய குழு இறங்கியது.

இந்த ஆண்டிற்கான மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய பேரிடர் நிதி 900 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டிய 900 கோடி தொகையில் முதல் தவணையாக ரூ.450 கோடி கொடுக்கப்பட்டது. பின்னர் இரண்டாவது தவணை தொகை தென் மாவட்ட மழைக்கு முன்பாகவே முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 12-ஆம் தேதி தமிழ்நாட்டுக்கான இரண்டாவது தவணை நிதி கொடுக்கப்பட்டது என தெரிவித்தார்.

Recent Posts

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

4 minutes ago

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

42 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

1 hour ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

2 hours ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

3 hours ago