புதிய கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான தர வரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.க்கு மீண்டும் முதலிடம் கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் மத்திய அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மாநில அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மாநில அரசு நிதி அளிக்கும் தன்னாட்சி கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுமையான கண்டுபிடிப்பு சாதனைகள் குறித்த ஆய்வுகளின் படி, கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் (ஏஆர்ஐஐஏ) வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் பிரிவில் சென்னை ஐ.ஐ.டி முதல் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டும் முதலிடத்தை பிடித்த ஐஐடி சென்னை இந்த ஆண்டும் முதலிடத்தை 2வது முறையாக பிடித்து சாதனை படைத்துள்ளது. மும்பை ஐ.ஐ.டி 2ம் இடமும், டெல்லி ஐ.ஐ.டி மூன்றாம் இடமும் பெற்றுள்ளன. சமீபத்தில் என்.ஐ.ஆர்.எப் என்கிற உயர்கல்விக்கான தேசிய தர வரிசையிலும் சென்னை ஐஐடி முதல் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மாநில அரசின் நிதி பெறும் தன்னாட்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் புனேவின் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் முதலிடத்தையும், கர்நாடகா பிஇஎஸ் பொறியியல் கல்லூரி 2ம் இடத்தையும், கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 3ம் இடத்தையும் பெற்றுள்ளன. தனியார் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி) மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…