மயிலாடுதுறை அருகே உள்ள விளநகர் பகுதியில் துறைகாட்டும் வள்ளலார் கோயில் உள்ளது.
1200ஆண்டு கால பழமை வாய்ந்த இந்த கோயில் 1959ம் ஆண்டு 25வது தருமை ஆதீனத்தால் குடமுழுக்கு செய்யப்பட்ட பின்னர் தற்போது தான் மாசிலாமணி சுவாமிகள் தலைமையில் அடுத்த மாதம் 4ம்தேதி 27வது சந்நிதானம் குடமுழுக்கு நடைபெற உள்ளது.
இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கோயிலின் வடபகுதியில் மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டுவதற்காக 10அடி குழி தோண்டிய போது மிகவும் பழமையான மெல்லிய செங்கற்களால் 4 அடிக்கு 4 அடியிலான சுவர் ஒன்றும், அதனை உடைத்த போது சுரங்கம் ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. அந்த சுரங்கத்தின் உள்ளே 10அடி தூரத்தில் அங்கே ஒரு சுவர் தெரியவந்தது.
தஞ்சையை ஆண்ட சோழர்களின் இளம் வாரிசுகளுக்கு போர் பயிற்சி உட்பட அனைத்து பயிற்சிகளும் கோயில் வளாகத்தில் வைத்து மிகவும் ரகசியமாக நடத்திய பின்னர், அவர்களுக்கு முடிசூட்டி அவர்களை அரண்மனைக்கு அழைத்து செல்வார்கள். அதுபோன்று தான் இந்த கோவிலிலும் அரசு வாரிசுகள் தங்கியிருக்கலாம்.
மேலும், சுமார் 10அடி தூரமுடைய இந்த சுரங்கப் பாதை ஆபத்து என்று வரும்போது தப்பித்து செல்வதற்காக கட்டப்பட்டிருக்கும் என்றும் ஓய்வுபெற்ற தொல்லியல்துறை ஆய்வாளர் முத்துச்சாமி கூறியுள்ளார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…