மரபை மீறி நடைமுறை விதியை மீறி கோடநாடு எஸ்டேட் விவகாரத்தை விவாதிப்பதா? – ஜெயக்குமார்

Published by
பாலா கலியமூர்த்தி

சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்க கூடிய நிலையில், கோடநாடு விவகாரம் குறித்து பேச அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டியிருப்பது பேரவை மரபை மீறிய செயல் என்று அதிமுக முன்னாள் ஜெயக்குமார் குற்றசாட்டியுள்ளார்.

இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக இன்றே விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று சபாநாயகரிடம் அறிவிப்பு நோட்டிஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கிறது. கோடநாடு விவகாரம் குறித்து பேச அறிவிப்பு நோட்டீஸ் அளித்திருப்பது, ஒரு அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பு.

விதி எண் 55ன் கீழ் அவரச பொது முக்கியத்துவம் வாய்ந்தவை விவாதிகப்படுவது வழக்கம். இதில், இயற்கை பேரிடர், தீ விபத்து, வெள்ளம் இதுபோன்ற பல பிரச்சனைகள் குறித்து அவரச அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்து விவாதிப்பது வழக்கம்.

ஆனால், மரபை மீறி நடைமுறை விதியை மீறி கோடநாடு எஸ்டேட் விவகாரத்தை விவாதிப்பதா? என கேள்வி எழுப்பி, ஜனநாயகவாதிகள் சிந்தித்து பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கோடநாடு விவகாரம் குறித்து பேச அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டியிருப்பது பேரவை மரபை மீறிய செயல் என்று குற்றசாட்டியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

1 hour ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

3 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

4 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

11 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

11 hours ago