நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி இருவரும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 23 -ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
மூவரின் கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.ஆனால் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி காவல்த்துறை டிஜிபி திரிபாதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து கொலை தொடர்பாக திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.விசாரணையை தொடர்ந்து சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி இருவரும் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட பின் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி இருவரும் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யபப்ட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…