Madurai High Court [Image source : The Hindu ]
சுற்று சூழல் மாசு ஏற்படும் விதமாக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நெல்லையில் போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய உடனே அனுமதி கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த நபர் தொடர்ந்த அவசர வழக்கில் மாசு ஏற்படுத்தும் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி இல்லை என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. தாமிரபரணி ஆறு ஏற்கனவே கடுமையாக மாசடைந்துள்ள நிலையில் இதுபோன்ற சிலைகளை கரைக்க அனுமதிக்க மாட்டோம்.
மனுதாரர் தயாரித்த சிலைகளை வீட்டில் வைத்து வழிபட அனுமதிக்கலாம். இருப்பினும், மனுதாரர் தயாரித்துள்ள விநாயகர் சிலைகளை வாங்குவோர், அதனை ஆற்றில் கரைக்க மாட்டோம் என உறுதிமொழி தர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டில் வைத்து வழிபட விநாயகர் சிலை வாங்குபவர்களின் முழு விவரங்களையும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனாதனத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வருகின்றனர் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…