நாளை முதல் ரூ.6000 விநியோகம்..! யாருக்கெல்லாம் கிடைக்கும்..?

Published by
லீனா

இந்த மாத தொடக்கத்தில், மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளானது. அதிலும், இந்த புயலின் போது, சென்னை பெருமளவில் பாதிப்பை சந்தித்தது. சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழையால், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது, பல நாட்களாக பார்த்து பார்த்து சேர்ந்த உடைமைகள் எல்லாம் இந்த மழை வெள்ளத்தில் பாதிப்படைந்தது. ஆனால், இன்னும் சில இடங்களில் மழைநீர் வடியாமல் தான் உள்ளது.

இந்த நிலையில், அரசு மற்றும் தன்னார்வலர்கள் மூலம் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு  ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ.6000 நிவாரண தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்..!

வெள்ள நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தை சென்னை வேளச்சேரியில் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி நிவாரணத் தொகை காண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

வெள்ள நிவாரண நிதி ரூ.6,000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் நேற்று தொடங்கியது. இன்று  வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட உள்ளது.  டோக்கன் பெற்றவர்கள், 17 முதல் 21-ம் தேதி வரை ரேஷன் கடைகளில், டோக்கனில் கொடுத்த தேதி, நேரத்துக்கு சென்று தங்களுக்கான நிவாரண தொகையை பெற்று கொள்ளலாம்.

அரசு, பொதுத்துறை உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டிருந்தால் வங்கிக் கணக்கு விவரத்துடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் குடும்ப அட்டை இல்லாமல் இருந்தாலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் நிவாரணம் பெறலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. 

Recent Posts

குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…

6 hours ago

”நீங்க இல்லாம நான் என்ன பண்ண போறேன்னு தெரியல பா” – உணர்ச்சி வசப்பட்டு பேசிய விஜய்!

சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…

6 hours ago

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…

6 hours ago

சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்’ திட்டம்.!

சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…

7 hours ago

“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…

8 hours ago

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.!

குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர்…

8 hours ago