தமிழகத்தில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்க உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக,அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
“தமிழக சட்டமன்றப் பேரவையில் கடந்த 08.09.2021 அன்று நடைபெற்ற 2021-22-ஆம் நிதியாண்டிற்கான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக்கோரிக்கையின் போது மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்களால் கீழ்க்காணும் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது:
சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் 5 மாவட்டங்களில், புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் 1 கோடியே 75 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் தோற்று விக்கப்படும்’,என்று அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து,முதற்கட்டமாக சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் கீழ்க்கண்ட 5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை சிறப்புக்கவனம் செலுத்தி நலத்திட்டங்களை உடனுக்குடன் எவ்வித தாமதமும் இல்லாமல் செயல்படுத்திட மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகத்தினை தேவையான பணியாளர்களுடன் நிரந்தர அடிப்படையில் தோற்றுவித்து அரசாணை பிறப்பித்திடுமாறு சிறுபான்மையினர் நல இயக்குநர் கேட்டுக் கொண்டார்.
1) சென்னை
2) வேலூர்
3) விழுப்புரம்
4) திருநெல்வேலி
5) கோயம்புத்தூர்
இந்நிலையில்,இந்த 5 மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்க உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது”,என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…