திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வரும் 6ஆம் தேதி வருமாறு தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகனுக்கு திமுக சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இழுபறியில் உள்ள கட்சிகள் :
இன்று மட்டும் திமுக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,விசிக ,இந்திய கம்யூனிஸ்ட் ,மதிமுக வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த நிலையில் விசிக உடன் 6 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மதிமுக உடன் இரண்டாம் கட்டம் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த நிலையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ நாளை தொகுதி பங்கீடு குறித்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவித்தனர்.கொங்குநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் உடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
திமுகவுடன் தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்பட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மார்ச் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முடிந்த தொகுதி பங்கீடுகள் :
திமுக கூட்டணியில் இது வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் -3,மனிதநேய மக்கள் கட்சிக்கு -2,விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு -6 தொகுதிகளும் மொத்தமாக இதுவரை 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…