திருநெல்வேலியில் திமுக 4-ஆகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான மாவட்ட கழக பொறுப்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர்களை துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்தநிலையில், திருநெல்வேலி மாவட்டம் தற்போது திருநெல்வேலி, தென்காசி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, திமுக 4 ஆகப் பிரிக்கப்படுவதாகவும், அதற்கான மாவட்டப் பொறுப்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர்களை துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அதன்படி, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்தியப் பகுதி, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு என நான்கு பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தொகுதிகளுக்கான உறுப்பினர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர்கள் அடங்கிய பட்டியலை துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
1. திருநெல்வேலி கிழக்கு: அம்பாசமுத்திரம், நாங்குனேரி, ராதாபுரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு பொறுப்பாளர் ஆவுடையப்பன் நியமனம்.
2. மத்திய திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகைதிகளுக்கு பொறுப்பாளராக அப்துல் வஹாப் நியமிக்கப்பட்டுள்ளார்.
3.தென்காசி வடக்கு: வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், ஆகிய பகுதிகளில் பொறுப்பாளராக ஆ. துரை நியமனம்.
4. தென்காசி தெற்கு: சங்கரன்கோவில் (தனி), தென்காசி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளுக்கு பொறுப்பாளராக சிவபத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…