“தொழிலார்களை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற திமுக அரசு” – ஓபிஎஸ்

Published by
Edison

அரசுப் போக்குவரத்து தொழிலார்களை அரசியல் கண்ணோட்டத்துடன் திமுக அரசு பார்க்கின்றதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கூறுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற அரசாக தற்போதைய தி.மு.க. அரசு விளங்குவதாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கூறுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

போக்குவரத்து இன்றியமையாதது:

மனித வாழ்க்கைக்கு உணவும் உறைவிடமும் போன்று போக்குவரத்தும் இன்றியமையாதது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த போக்குவரத்தினை திறமையாகவும், நேர்த்தியாகவும், பாதுகாப்பாகவும் வழங்குவது போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்.

அப்பாவி போக்குவரத்துத் தொழிலாளர்கள்:

தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக அப்பாவி போக்குவரத்துத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

பழிவாங்கும் நிலைமை:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், பழிவாங்கும் நிலைமை என்ற பேச்சுக்கே இடமில்லாத சூழ்நிலை,அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிலவிய தொழிலாளர்கள் எந்தச் சங்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை இடமாறுதல் செய்யாமல் அவர்களுக்கு வழித்தட பணியாணை (Route Posting) வழங்கப்பட்டதோடு,
உடல் நிலைக் குன்றியவர்களுக்கு இலகுவான பணிகள் வழங்கப்பட்டன. இதன் காரணமாக தி.மு.க. தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்றக் சங்கத்தைச் சார்ந்த உறுப்பினர்களும் பயனடைந்தார்கள். தொழிலாளர்களை தொழிலாளர்களாக பாவித்த அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.

அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற  தி.மு.க. அரசு:

ஆனால், தொழிலாளர்களை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற அரசாக தற்போதைய தி.மு.க. அரசு விளங்குவதாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கூறுகிறார்கள். அண்ணா தொழிற்சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் வழித்தட பணியாணை மறுக்கப்படுவதாகவும், அவர்களைவிட பணியில் இளையவராக உள்ளவர்களுக்கு வழித்தட பணியாணை வழங்கப்படுவதாகவும், எவ்வித காரணமுமின்றி அவர்கள் பணிமனை மாற்றம் செய்யப்படுவதாகவும், சில நேர்வுகளில் பணிவழங்க மறுப்பதாகவும், பணிக்கு வரும் மூத்தத் தொழிலாளர்களுக்கு வருகைப் பதிவு கூட வழங்காமல் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும், அண்ணா தொழிற்சங்கம் பயன்படுத்தி வந்த சங்க அலுவலகங்களை வலுக்கட்டாயமாக தி.மு.க.வினர் எடுத்துக் கொள்வதாகவும் அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து வளர்ச்சிக்கு முதுகெலும்பு:

தமிழ்நாட்டின் போக்குவரத்து வளர்ச்சிக்கு முதுகெலும்பாக, அடித்தளமாக, ஆணிவேராக விளங்கும் தொழிலாளர்களை அவர்கள் சார்ந்திருக்கும் தொழிற்சங்கத்தின் அடிப்படையில் பிரித்து பார்த்து, அவர்கள் அண்ணா தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களை பழிவாங்குவது என்பது தொழில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், தொழில் உறவை சீர்குலைப்பதாகவும் அமையும்.

ஒரே கண்ணோட்டம்: 

எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்த்து, கட்சி வித்தியாசமின்றி பணிகளை ஒதுக்கவும், பணியிட மாற்றம், இலகுப் பணி, பதவி உயர்வு எனஅனைத்தும் விதிகளுக்குட்பட்டு நடைபெறவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

3 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

3 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

4 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

5 hours ago

சொந்த ஊர் பீகார்.., தமிழில் 93 மார்க் எடுத்த மாணவி – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…

5 hours ago

மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்.., நீயா? நானா? போட்டியில் கமல் – சிம்புவின் ‘தக் லைஃப் டிரெய்லர்.!

சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…

5 hours ago