திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார்?… கூடுகிறது திமுக பொதுக்குழு… தேர்வாகிறார் பொதுச்செயலாளர்…

Published by
Kaliraj

கடந்த மார்ச் 7ம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலர் அன்பழகன் உடல் நலக்குறைவு மற்றும்  வயது முதிர்வு காரணமாக தனது 97ஆம் அகவையில்  காலமானார். தி.மு.க.வில் தலைவர் பதவிக்கு அடுத்ததாக திமுக பொதுச்செயலர் பதவி என்பது அதிகாரமிக்கது. எனவே இந்த பதவியை கைப்பற்ற தற்போதைய திமுக  பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் நேரு, பெரியசாமி, டி.ஆர்.பாலு, பொன்முடி, அ.ராஜா உள்ளிட்ட கட்சியின் மூத்த முன்னோடிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், புதிய பொதுச்செயலராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து தமிழகம் முமுழுவதும் கட்சியினரிடம் சர்வே எடுக்கும் பணியில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் குழுவினரும் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அறிவாலயத்தில் வரும் மார்ச் 29ம்தேதி திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். பொதுச்செயலராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை கட்சி தலைமை முன்பே தீர்மானித்து அந்த நபரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ‘ திமுக பொதுச்செயலர் தேர்வுக்காக தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 29ம் தேதி காலை 10:00 மணிக்கு சென்னை அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் என் தலைமையில் நடைபெறும். ‘பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

11 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

13 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

17 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

17 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

19 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

20 hours ago