நள்ளிரவில் தேர்தல் ஆணையத்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் .

Published by
Dinasuvadu desk
  • நள்ளிரவில் தேர்தல் ஆணையத்திடம் வாக்கு எண்ணிக்கை தாமதமாவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் .
  • ஜனநாயக படுகொலை நடந்திருப்தாகவும்  வெற்றியை தடுக்க அதிமுக முயற்சிக்கிறது இதற்கு தேர்தல் ஆணையம் துணைபோகிறது என்றார்.

திமுக முன்னணியில் இருக்கும் பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமாவதாகவும்   மீண்டும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.

தர்மபுரி  ,ராமநாதபுரம் ,கரூர், கடலூர் போன்ற இடங்களில் வெற்றி பெற்றும் சான்றிதழ் தர மறுத்து வருகின்றனர் என்றும் ஜனநாயக படுகொலை நடந்திருப்தாகவும் , திமுக வெற்றியை தடுக்க அதிமுக முயற்சிக்கிறது அதற்க்கு  தேர்தல் ஆணையம் துணைபோகிறது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

தேர்தல் ஆணையத்தில் நாங்கள் கொடுத்த எந்த புகார்க்கும்  நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக எந்த எந்த பகுதிகளில் வெற்றி பெறப்போகிறோம் என்று தெரிந்து முடிவுகள் நிறுத்தப்பட்டு, அதன் பின்பு அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது .

நாங்கள் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்  தர்ணாவில் ஈடுபடுவது உறுதி என்றும் நீதிமன்ற உத்தரவுகளை தேர்தல் ஆணையம் கடைபிடிக்கிறதா என்பதை பார்ப்போம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில்  திமுக தொடர்ந்த வழக்கை  உயர்நீதிமன்ற அவசர வழக்காக நீதிபதிகள்  விசாரிக்க மறுத்துவிட்டனர்.ஆனால் அதில் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கிறது என்ற உறுதி மொழியையும்,சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் மேலும் ஆணையம் இன்று  மாலை 4  மணிக்குள் எழுத்துபூர்வமாக  அறிக்கை அளிக்க வேண்டும் என்று  நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து மாலையில் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருந்த நிலையில் மீண்டும் இரவு புகார் ஒன்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

8 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

10 hours ago