திமுக பேரணிக்கு விளம்பரம் செய்த அதிமுகவுக்கு நன்றி! – மு.க.ஸ்டாலின் பேட்டி!

Published by
மணிகண்டன்
  • திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் நாளை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணியை நடத்த உள்ளன.
  • அந்த பேரணிக்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் அவரச மனு கொடுக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நாளை திமுக தலைமையில் அதன் தோழமை கட்சிகள் பிரமாண்ட பேரணி நடத்த உள்ளன.

இந்த போராட்டத்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரச வழக்கு போடப்பட்டது. அதில் அனுமதி குறித்து எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. பேரணி நடைபெற்றால் அதனை ட்ரோன் கேமிரா மூலம் கண்காணிக்க வேண்டும். பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என மட்டும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

இது குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாளை தோழமை கட்சிகளுடன் பிரமாண்ட பேரணி நடத்த இருக்கின்றோம். இந்த பேரணிக்கு தடை கேட்டு அவரச வழக்கு போட்டு எங்கள் பேரணியை விளம்பரப்படுத்திய அதிமுகவுக்கு நன்றி எனவும், அதிமுக சில நபர்களை நீதிபதி வீட்டிற்கே அனுப்பி தடை கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி கூறிவிட்டார். அவருக்கு நன்றி’ என தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago