சென்னை : தவெகவில் இன்று புதிதாக இணைந்த முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ்-க்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கி அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், திமுக முன்னாள் MLA டேவிட் செல்வன், அதிமுக முன்னாள் MLA ராஜலட்சுமி, ஸ்ரீதரன் ஆகியோர் த.வெ.கவில் இணைந்தனர். இது தவிர ஓய்வு பெற்ற நீதிபதி சுபாஷ், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளைத் தலைவர் மரிய வில்சன் ஆகியோரும் இணைந்தனர். இவர்கள் கட்சியில் இணைந்தது குறித்து அக்கட்சியின் தவெக தலைவர் […]
சென்னை : ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். ராஜ்யசபா வேட்பாளர்களாக அக்கட்சியின் மூத்த தலைவர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு தனபால் போட்டியிடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இரண்டு இடங்களிலும் அதிமுகவே போட்டியிடுகிறது. தேமுதிகவிற்கு சீட் கொடுப்பது அதிமுகவின் கடமை என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில், சீட் கொடுக்கப்படவில்லை. அதே நேரம், அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்று கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் 2025- […]
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக அருண்ராஜ் செயல்பட்டு வந்தார். தற்பொழுது, தனது வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவைமத்திய நிதியமைச்சகம் ஏற்று கொண்டது. இந்த நிலையில், அரசு பதவியை ராஜினாமா செய்துள்ள அருண் ராஜூக்கு விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப் பொதுச்செயலாளர் அல்லது துணைப் பொதுச்செயலாளர் […]
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும் ஜனநாயகப் பொறுப்பில் தவெக முதன்மை சக்தியாக இருக்கும் என்று தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ”ஒன்றிய பாஜக அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம், இஸ்லாமியச் சகோதரர்களின் உரிமையில் நேரடியாகத் தலையிட்டது. இது, இதர சிறுபான்மையினர் நலன் மற்றும் அரசியலமைப்பைப் பாதிக்கும் மறைமுக ஆபத்தையும் கொண்டது. இதனை […]
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 இன்ஸ்பெக்டர்கள் மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டத்திற்கு வெளியேயும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) வருண்குமார் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் முன்னதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு காவல்துறையின் வழக்கமான நடைமுறையின்படி, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அதிகாரிகளை […]
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். நேற்று தமிழ்நாட்டில் இருந்து நீட் நுழைவுதேர்வு எழுத சென்ற மாணவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நீட் தேர்வு சோதனை குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் தனது கண்டனத்தை பதிவு செய்தார். இன்று அவர் பேசுகையில், ” இந்தியா முழுக்க […]
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. அரசியல் தலைவர்களும் அதற்கான பதிலை அளித்து வருகின்றனர். திமுகவை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள காங்கிரஸ் விசிக, மதிமுக, கமியூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பதும், அதிமுக – பாஜக கூட்டணியும் தற்போது வரை உறுதியான கூட்டணியாக பார்க்கப்படுகிறது. மற்ற பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இன்னும் கூட்டணி பற்றி […]
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை அக்கட்சி தலைவர் விஜய் தலைமையேற்றி நடத்தி வருகிறார். உடன் கட்சி நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் தேர்தல் சமயத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்காக முதலில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தேர்தல் வியூகம் […]
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அதற்காக இன்று காலையில் அக்கட்சி தலைவர் விஜய் சென்னையில் இருந்து தனியார் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு கோவை வந்த விஜய்க்கு தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு திறந்தவெளி வாகனத்தில் தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு சிறுது தூரம் ரோட் ஷோ சென்ற விஜய், பிறகு அவிநாசி சாலையில் உள்ள […]
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கிற்கு தலைமை தங்குவதற்காக அக்கட்சி தலைவர் விஜய் கோவை வந்துள்ளார். அவரை வரவேற்க தவெக தொண்டர்கள் கோவை விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லை பதற்றம் சற்று அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு காஷ்மீர் பகுதியில் இந்தியா எல்லைக்குள் […]
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார். தற்பொழுது, துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க சிறப்பு விமானம் மூலம் ஜெகதீப் தன்கர் கோவை வருகிறார். இந்த நிலையில், உதகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணிப்பதாக அறிவித்த சில நிமிடங்களில், தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களும் புறக்கணிப்பாதக அறிவித்துள்ளனர். அதன்படி, மனோன்மணியம் […]
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை செயல்படுத்தி வருகின்றனர். எப்போதும் தனித்தே தேர்தல் களம் காணும் நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்து தான் போட்டி என அறிவித்து அதற்கான தேர்தல் பணிகளில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈடுபட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் இதுவரை வாக்குக்கு பணம் கொடுத்து வாக்கு பெற்றதில்லை. […]
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் அப்பகுதி கிராமத்தில் உள்ள விவாசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது என ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதி கிராம மக்கள் 2 வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு […]
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் ” ஒரு சிலர் திமுகவை மட்டுமே நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச் சீட்டு விசிக தான். அதன் காரணமாக தான் இப்படி பேசிக்கொண்டு வருகிறார்கள்.எந்த எதிர்பார்ப்புமின்றி கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் துணிவு, தெளிவு வேண்டும் . தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும் எனவும் […]
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து திமுகவை சேர்ந்தவர்கள் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். உதாரணமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தமிழக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பேசியிருந்தார்கள். இந்த சூழலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் எடப்பாடி டிரம்புடன் கூட்டணி வைத்தால் கூட டெபாசிட் வாங்கமாட்டார் என விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய […]
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல் களமே பரபரத்து கொண்டிருக்கும். அதற்காக தற்போதே கூட்டணிகள், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பிரதான கட்சிகள் தங்கள் வேலையை தீயாக தொடங்கிவிட்டன. தேர்தல் அரசியலில் முதல் முறையாக களம் காணும் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியும் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு யூகங்களை ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே கட்சி மாவட்டம், வட்டம் உள்ளிட்ட நிர்வாக பொறுப்புகளுக்கு ஆட்களை […]
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து திமுகவை சேர்ந்தவர்கள் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள். உதாரணமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தமிழக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பேசியிருந்தார்கள். இந்த சூழலில், அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவை சேர்ந்தவர்களுக்கு அதிமுகவை சேர்ந்தவர்களும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக […]
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா இந்த கூட்டணி குறித்து அறிவித்தார். தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் கூட்டணி என்றும், 2026-ல் NDA கூட்டணி ஆட்சியமைக்கும் என்றும் தெரிவித்தார். அதிமுக – பாஜக கூட்டணி அறிய்வித்தது முதலே பல்வேறு அரசியல் நகர்வுகள் நிகழ்ந்து வருகின்றன. இதில் சில அதிமுக நிர்வாகிகளுக்கே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக […]
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். விஜய் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி அகில இந்திய முஸ்லிம் ஜமாஆத் அமைப்பினர்கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விஜய் இப்தார் விருந்துக்கு குடிகாரர்கள் மற்றும் சூதாட்டக்காரர்களை அழைத்து வந்து இஸ்லாமியர்களை அவமதித்ததாக குற்றம்சாட்டினர். மேலும், விஜய்யின் திரைப்படங்களில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டதாகவும், இனி இஸ்லாமியர்கள் விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கக் கூடாது […]
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்கள் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாடு 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெகவின் தேர்தல் பணிகளை வலுப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டின் ஐந்து மண்டலங்களில் (வடக்கு, தெற்கு, மேற்கு, டெல்டா, மத்திய) நடத்த திட்டமிடப்பட்ட முதல் பூத் கமிட்டி மாநாடாகும். ததவெக தலைவர் விஜய், தமிழகம் […]