தேர்தல் தேதி அறிவிப்பு! மீண்டும் நீதிமன்றத்தை நாட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு!

Published by
மணிகண்டன்
  • தமிழகத்தில் புதிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.
  • இதில் முதற்கட்ட தேர்தல் டிசம்பர் 27யிலும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30யிலும் நடைபெற உள்ளது.
  • உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி தேர்தல் தேதி அறிவித்துள்ளதாக திமுக குற்றசாட்டு.
  • திங்கள் கிழமை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையிட திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக உதயமான 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை அடுத்து தமிழகத்தில் இன்று தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30ம் தேதியும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 2020, ஜனவரி 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்னர் அனைத்து கட்சிகளிடமும் ஆலோசனை கேட்க வேண்டும், வார்டு வரையறை இட ஒதுக்கீடு குறித்த முடிவுகளை எடுத்த பின்னரே தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.0000000000000000 இதன் காரணமாக திங்கள்கிழமை மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட திமுக தலைமை முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிட்ட மாநில தேர்தல் ஆணையத்திற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  சுதந்திர இந்தியாவில் தேர்தலை கேலிக்கூத்தாக்கி உள்ளனர்  அதிமுக அரசின் கை பொம்மையாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது மீண்டும் நீதிமன்றத்தை நாடுவது தவிர வேறு வழியில்லை.  என திமுக சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

59 minutes ago

சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…

1 hour ago

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

15 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

16 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

17 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

17 hours ago