கோயம்புத்தூர் மாவட்டத்தில் வறுமையால் பூவிற்ற பள்ளிக்குழந்தைகளுக்காக 1லட்சம் நிதி திரட்டி கொடுத்துள்ள திமுக எம்பிக்கு குவியும் பாராட்டுக்கள்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருதமலை சாலையில் சபீர் என்பவர் தனது மகன் மற்றும் மகளுடன் இணைந்து தனது பூ விற்கும் தொழிலை நடத்தி வந்துள்ளார். இவர் பூவை எடுத்துக் கொடுக்க குழந்தைகள் சாலையோரம் செல்லும் வாகன ஓட்டிகளிடம் சென்று பூக்களை விற்று வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடந்தாலும் எப்படி கல்விக் கட்டணம் செலுத்துவது என வழி தெரியாமல், வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்வதற்காகவும் பூக்களை விற்கிறோம் என அவரது தந்தை கவலையுடன் தெரிவித்துள்ளார்.இந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகியது.
இதனை தொடர்ந்து தர்மபுரி திமுக எம்பி செந்தில் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் சிறுவர்களின் படிப்புக்காக அவரது தந்தையின் வங்கி கணக்கில் முடிந்தவர்கள் ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு நிதி திரட்டினார். அவரது கோரிக்கையை ஏற்று பலர் நிதி கொடுத்துள்ளனர். அவர் வைத்திருந்த இலக்கு 80,000 தாண்டி ஒரு லட்சம் வரை நிதி திரண்டுள்ளதால் தற்பொழுது அந்த குழந்தைகளின் கல்விச் செலவுக்கு அவரது தந்தையிடம் கொடுத்துள்ளார். இவரது இந்த செயல் பல அமைச்சர்கள் மற்றும் சமூக வாதிகளின் பாராட்டை பெற்றுள்ளது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…