தமிழகத்தில் டிரண்டாகி மறந்த மூலப்பத்திர விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்…!!!

Published by
Kaliraj
  • சென்ற வாரம் வரை திமுக முரசொலி அலுவலகம் இருந்த இடம் குறித்த சர்ச்சை பலமாகவே இருந்தது.
  • இந்நிலையில் தமிழக மக்கள் மறந்த இந்த செய்தியை தற்போது தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் தற்போது மீண்டும் தனது நோட்டிஸ் மூலம் நினைவுபடுத்தியுள்ளது.

திமுக  முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் முதன்முதலில் ஒரு புகார் ஒன்றை கூறினார். இந்த புகாரையடுத்து இந்த விவகாரம்  தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி  மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில்  புகார் அளித்தார். மேலும் இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக தமிழகத்தில் வெடித்தது. மேலும், இதுதொடர்பான விசாரணை சென்னையில் நடைபெற்றது. இதில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக அந்த கட்சியின்  அமைப்புச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினரான  ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராகி அவரது தரப்பு ஆதாரங்களை சமர்ப்பித்தார்.  இதுபோலவே  பாரதிய ஜனதா கட்சி  சார்பிலும் மாநில செயலாளர்  சீனிவாசன் ஆஜரானார். பலரும் மறந்த இந்த விவகாரத்தில் தற்போது மீண்டும் இவ்விவகாரம் தலைதூக்கியுள்ளது.இந்நிலையில் இந்த,  பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் கட்டப்பட்டிருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக, திமுக தலைவர்   ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த ஆணையம் அனுப்பிய  நோட்டீஸில் இந்த பஞ்சமி நில விவகார புகார் தொடர்பாக வரும் ஜனவரி மாதம் 7ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறந்த இந்த விவகாரம் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

சுர்ஜித்தின் தாயையும் கைது செய்தால் கவினின் உடலை பெற்றுக் கொள்கிறோம்- சந்திரசேகர்!

சுர்ஜித்தின் தாயையும் கைது செய்தால் கவினின் உடலை பெற்றுக் கொள்கிறோம்- சந்திரசேகர்!

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில்,…

22 minutes ago

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது வரலாற்றுப் புரட்சி – ஓ.பன்னீர்செல்வம்!

சென்னை : முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவின் 1998-ல் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த முடிவு “வரலாற்றுப்…

2 hours ago

வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்! வழக்குப்பதிவு செய்த போலீசார்!

கொச்சி : கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளி மீது, இளம்பெண் மருத்துவர் ஒருவர்…

3 hours ago

INDvsENG : தொடரை சமன் செய்யுமா இந்தியா..இன்று 5-வது டெஸ்ட் போட்டி!

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 31,…

4 hours ago

ஆக 2 முதல் 5 வரை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம்…

4 hours ago

நடப்பு நிதியாண்டில் 9 ராக்கெட்கள் ஏவ திட்டம்- இஸ்ரோ தலைவர் நாராயணன் முக்கிய தகவல்!

சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன், நடப்பு நிதியாண்டில் (2025-26) 9 முக்கிய…

4 hours ago