தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்த கோரி திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் வைத்தியலிங்கம், முனுசாமி ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், அதிமுக எம்.பி. முகமது ஜான் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால், தமிழ்நாட்டில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடத்த வேண்டும் என திமுக பொருளாளர் டி.ஆர். பாலு திமுக எம்.பி வில்சன் ஆகியோர் இந்திய தேர்தல் தலைமை ஆணையத்தில் மனுவை கொடுத்துள்ளனர்.
சமீபத்தில் தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஏற்கனவே அதிமுக எம்.பி-களாக மாநிலங்களவை இருந்த கே.பி முனுசாமி, வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டதால் தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…