திமுக பொதுக்கூட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வருகிறது. இந்தநிலையில், திமுக சார்பில் நாளை மறுநாள் வேட்பாளர் பட்டியலும், வருகின்ற 11-ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. திமுக சார்பில் 11-வது மாநில மாநாடு நேற்று திருச்சியில் நடந்தது.
மு .க ஸ்டாலின் தனது பிறந்த நாளான மார்ச் 1-ம் தேதி இதை அறிவித்தார். இக்கூட்டம் “தமிழகத்தில் விடியலுக்கான முழக்கம்” என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனுரில் சுமார் 750 ஏக்கரில் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர்அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தது. பல லட்சம் தொண்டர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், நேற்று பொதுக்கூட்டம் நடத்திய திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திமுக பொதுக்கூட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக்கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…
டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…
டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…
டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)…
சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங்…
பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும்…