அதிமுக மாநாடு நடைபெறும் அதே நாளில் தான் திமுகவின் போராட்டம் – இபிஎஸ் விமர்சனம்

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு வரும் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தங்களின் பலத்தையும், செல்வாக்கையும் காட்டும் வகையில் மாபெரும் மாநாடாக இந்த எழுச்சி மாநாட்டை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.

மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை முன்னிட்டு, தொடர் ஜோதி ஓட்டமும் தொடங்கப்பட்டது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் தமிழகத்தில் நீட் விலக்குக்கு அனுமதி அளிக்காத மத்திய அரசை கண்டித்தும், நீட் விலக்கு மசோதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரும் 20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக அணியினர் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அணி நிர்வாகிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எழிலரசன், திமுக எம்பி கனிமொழி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், அதிமுகவின் மதுரை மாநாடு நடைபெறும் அதே நாளில் திமுக திட்டமிட்டே நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை அறிவித்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இபிஎஸ், அதிமுகவின் மாநாட்டை கண்டு பயந்து, நடுங்கி என்ன செய்வது என்று அறியாமல், வரும் 20ம் தேதி நீட் தேர்வை மையமாக வைத்து அமைத்து உதயநிதி ஸ்டாலின் அறவழியில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பத்திரிகை செய்திகளில் மூலம் தெரிந்துகொண்டேன்.

அதிமுக மாநாடு நடைபெறும் அதே நாளில் திமுக போராட்டம் என்பது வேண்டுமென்றே திட்டமிட்டுள்ளதாக கருதுகிறோம். நீட் தேர்வை ரத்து செய்ய திமுக முயற்சி எடுத்து வருகிறது. இந்த முயற்சியை அதிமுக ஏற்கனவே எடுத்துவிட்டது, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, நாங்கள் என்ன செய்தமோ, அதை தான் திமுகவும் செய்து வருகிறது. வேறு என்ன புதுசா கண்டுபிடித்து உள்ளார்கள் என கேள்வி எழுப்பினார். இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பது காரணத்தால் நாடாளுமன்றத்திலயாவது நீட் தொடர்பாக கேள்வி எழுப்புவார்கள் என பார்த்தால் அதுவும் இல்லை என திமுகவை இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

16 minutes ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

47 minutes ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

1 hour ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

2 hours ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

2 hours ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

4 hours ago