திமுகவின் சமூக நீதி போராட்டங்கள் தொடரும் என கனிமொழி எம்.பி அவர்கள் ட்வீட்.
மருத்துவ மேற்படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27%, EWS பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘PG மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் 27% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புடையது. அரசியலமைப்பிற்கு எதிரான ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து வரும் நமது கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய உறுதியான நிலைப்பாட்டிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தீர்ப்பு. திமுகவின் சமூக நீதி போராட்டங்கள் தொடரும்.’ என பதிவிட்டுள்ளார்.
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…