3 நாட்களில் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும் என முதல்வர் தெரிவித்த நிலையில், தினந்தோறும் தொற்று அதிகரித்து வருவது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது – முக ஸ்டாலின் அறிவுப்பு.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு மருத்துவர் நேற்று பலியாகி இருப்பது வேதனையளிக்கிறது என்று இரங்கல் தெரிவித்துள்ளார். பின்னர் மக்களை காக்கும் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார். இனியும் அதிமுக அரசு அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டிய அவசர நிலையையே இது உணர்த்துகிறது என்று பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து, 3 நாட்களில் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும் என முதல்வர் தெரிவித்த நிலையில், தினந்தோறும் தொற்று அதிகரித்து வருவது அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டினார். மருத்துவரின் உயிரிழப்பு என்பது வைரஸ் பரவலை தடுப்பதில் அதிமுக அரசு சிறுத்தும் அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டிய அவசரத்தையும், அவசியத்தையும் வலியுறுத்திக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் விரைவு பரிசோதனை கருவிகள் மூலம் மிக பரவலான சோதனைகள் நடத்தி, தொற்றின் அளவை மதிப்பீடு செய்து அதனடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…