தமிழ்நாடு

பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் வழங்குகிறார்களா ? முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

Published by
Venu
பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் வழங்குவதாக மு.க.ஸ்டாலின் கூறியது பொய்யான குற்றச்சாட்டு என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு ஆகப்போகும் நிலையில் தற்போது பொங்கல் பரிசு ரூ.2500 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். காலம் கடந்தேனும் மக்களுக்கு உதவி கிடைக்கிறதே என்பதில் மகிழ்ச்சிதான்.ஆனால் அரசு கஜானா நிதியை அ.தி.மு.க.வினர் கையாள்வது ஏன்? அ.தி.மு.க.வினரின் தலையீட்டை முதலமைச்சர் திரு. பழனிசாமி தடுத்து நிறுத்த வேண்டும். ரேசன் கடை ஊழியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே சட்டமன்ற தேர்தல் குறித்து வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் இன்று நாமக்கல்லில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.அப்பொழுது அவர் பேசுகையில், பொங்கல் பரிசுத்திட்டம் பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.இந்த திட்டம் நிறைவேறிவிட்டால் அரசுக்கு நல்லபெயர் வந்துவிடும் என்ற எண்ணத்தில் இந்த திட்டத்தை நிறுத்த திமுக சூழ்ச்சி செய்கிறது.மேலும் பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் வழங்குவதாக ஸ்டாலின் கூறியது பொய்யான குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

10 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

11 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

12 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

13 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

16 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

16 hours ago